அட வந்துட்டீங்களா வருத்தப்படாதீங்க

என்னோட ப்ளாக் பார்க்கவும் ஆள் வந்திருச்சே

சரி வாங்க வணக்கம்

நான் பெரிய படைப்பாளி எல்லாம் இல்லே. நட்பு வளர்க்க நண்பர்களை தக்க வைக்கவும் ப்ளாக்கும் ஒரு சிறந்த வழி.அப்படியே நம்ம தமிழையும் பார்க்க வைக்கலாம்ன்னு ஒரு சின்ன முயற்சி இந்த ப்ளாக்

படைப்பாளி இல்லைன்னாலும் ஏதோ நினைச்சது எல்லாம் கிறுக்கி வைக்கலாம். அப்போ தான் நம்ம வருங்கால சந்ததிக்கு இப்படி ஒரு கிறுக்கன் இருந்தா ன்னு தெரியும்லே. வரலாறு முக்கியம்ல.எப்படியோ வழி தெரியாம வந்தது வந்துட்டீங்க. சும்மா அப்படியே நான் என்ன எல்லாம் கிறுக்கி இருக்கேன்னு  பார்த்துட்டு அப்படியே ஒரு திட்டு திட்டிட்டு போயிடுங்க

என்றும் நட்புடன்

எங்கும் உள்ளவன்

யார் எங்கும் உள்ளவன்

எங்கும் உள்ளவன் கடவுள்ன்னு தான் பெரியவங்க சொல்லி இருக்காங்க. இவன் கடவுள் எல்லாம் இல்லேங்க.அன்றாட வாழ்வில் சராசரி நீங்க எங்கும் எளிதில் பார்வைக்கு கிடைப்பவன் தான் இந்த எங்கும் உள்ளவன். எங்கே போனாலும் கண் முன்னால் சிக்கும் சராசரி மனிதன் தான் இவன்

பயணத்தில் பக்கத்தில் உக்காந்து பத்திரிக்கை எட்டி படிப்பவன்.சாலையில் சிக்னலில் பரபரப்பா சுற்றும் முற்றும் பார்த்துட்டு போகலாமா வேணாமான்னு யோசிச்சி திட்டு வாங்குபவன்.. ஆக மொத்தம் just pass மார்க் வாங்க பார்டரில் பாஸ் செய்தவன் தான்

அதுக்கு என்ன இப்போன்னு கேக்கறீங்களா ? ஹிஹிஹி இங்கே வந்து பெரிய பெரிய படைப்புகள் எதிர்பார்க்காதீங்க. கவிஞனோட எழுத்தாளனோட படைப்புகள் இருக்காது இங்கே..  ஒரு சராசரி மனிதனின் கவிதை முயற்சியும், கட்டுரை முயற்சியும் தான் இருக்கும்

சரி என்னை பத்தி சொல்ல எனக்கே ரொம்ப போரடிக்குது. இப்போதைக்கு நிப்பாட்டிக்கிறேன்